ஆர்ப்பாட்டத்தில் மாணவ- மாணவியர்! குண்டுக்குழி சாலையை சீர்படுத்த எடுத்த முடிவு...! நடந்தது என்ன?
Students protest decision repair hole road What happened
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கசாநகர் - டகிகான் சாலை சேதமடைந்து மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் அந்த பகுதியிலுள்ள பள்ளிக்கு மாணவ - மாணவியர், இந்த சாலை வழியாக செல்வது வழக்கம் உள்ளது.ஆனால், கனமழையால் சாலை குண்டும் குழியுமான தண்ணீர் தேங்கியிருந்ததால் மாணவ-மாணவியர் மிகுந்த சிரமமடைந்தனர்.மேலும், சாலையை சீரமடைத்து தருமாறு கிராமத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர்.
இருப்பினும்,அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினர்.இந்த நிலையில், சேதமடைந்த சாலையை சீரமைத்து தரும்படி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவியர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்த தாசில்தார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாலை சீரமைப்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, மாணவ - மாணவியர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
English Summary
Students protest decision repair hole road What happened