உயிரை பறித்த செல்பி மோகம்.. ரயில் ஏறி செல்பி எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி..!
Student Dead In UttarPradesh
ரயில் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு பள்ளி மாணவர்கள் சிலர் வந்தனர். அப்போது மஞ்சூர் என்ற மாணவர் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி செல்பி எடுக்க முயன்றான்.
அதனை கண்ட அங்கிருந்தவர்கள் மீது ஏற வேண்டாம் என்று கூறி உள்ளனர். ஆனால், அதையும் கேட்காமல் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற போது ரயிலுக்கு மேல் சென்றுகொண்டிருந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபமாக செல்பி எடுக்கும் போது பல மாணவர்கள் உயிரிழந்த வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Student Dead In UttarPradesh