நெருங்கும் ஓணம் பண்டிகை - சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம். இந்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-"சென்னையில் இருந்து கொல்லத்திற்கு பிற்பகல் 3.10க்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06119) ஆக்ஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06120) ஆக்ஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் புறப்படும்.

இந்தச் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

special train run at chennai to kollam for onam festival


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->