'இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம், இராஜதந்திர தவறாகும்': மோடியை விமர்ச்சித்துள்ள சோனியா..!
Sonia slams Modi says Indias silence on Israel-Iran issue is a diplomatic blunder
இதற்கிடையே, இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது சரியில்லை என்று சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகின்றமை மேற்கு ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்ட மீறல் என்றும், இது பிராந்தியத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘இஸ்ரேல் – ஈரான் விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம், ராஜதந்திரத் தவர் என்றும், இந்தியாவின் தார்மீக மற்றும் யுத்தி சார்ந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச் செல்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலின் தாக்குதலை சட்டவிரோதமானது மற்றும் இறையாண்மை மீறிய செயலாக உள்ளது என்றும், காசாவில் நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஆழமான நாகரிகத் தொடர்பு உள்ளது. கடந்த 1994-இல் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் வருவதைத் தடுக்க ஈரான் உதவியது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இஸ்ரேலுடன் இணைந்து இறையாண்மை கொண்ட பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியா இனியும் தாமதிக்காமல், தெளிவாகப் பேச வேண்டும் என்றும், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், போர் பதற்றத்தைத் தணிக்க அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Sonia slams Modi says Indias silence on Israel-Iran issue is a diplomatic blunder