6 வது முறையாக வந்த சம்மன் - ஆஜராகுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? - Seithipunal
Seithipunal


புதிய மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதனால், அவருக்கு சம்மன் அனுப்பியது. சுமார் ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. 

ஆனால், தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என்று கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

ஆகவே, வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது ஆறாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. 

அதன் படி வரும் 19-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்துள்ளது. இந்த முறையும் அவர் ஆஜராவாரா? என்பது தெரியவில்லை. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என்று கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sixth time summon send to aravind kejriwal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->