கார் மீது சரக்கு லாரி மோதி 6 பேர் பலி; ஒருவர் கவலைக்கிடம்..!  - Seithipunal
Seithipunal


டேராடூன் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. சந்திப்பு அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் கார் மீது சரக்கு லாரி பலமாக மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து போலீசார் சரக்கு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six peoples died and one peoples injured in uttarkhant car accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->