கர்நாடகாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு; குற்றவாளிகள் 06 பேருக்கு தூக்கு தண்டனை..!
Six convicts sentenced to death in the murder case of a BJP functionary in Karnataka
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகர பாஜக இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ் குருபரா (35), கங்காவதி அருகே 06 பேர் கொண்ட கும்பலால் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கொலை குறித்து, வழக்குப் பதிவு செய்த கங்காவதி போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த ரவி (29), மைலாரி (32) உள்ளிட்ட06 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 06 பேருக்கு எதிராக 925 பக்க குற்றப்பத்திரிகையை கொப்பல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 06 மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர்.

அதன்படி, வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சாதனந்த நாகப்பா நேற்று தீர்ப்பளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;
வெங்கடேஷ் குருபரா மீதான முன்பகை காரணமாக ரவி (29), மைலாரி (32), தன்ராஜ் (28), பஷீர் (26), சலீம் (30), கங்காதரா (32) ஆகிய 6 பேரும் திட்டமிட்டு கொலை செய்ததை அரசு தரப்பில் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர். எனவே, 06 பேருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.03 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை வெங்கடேஷ் குருபராவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Six convicts sentenced to death in the murder case of a BJP functionary in Karnataka