டெல்லி கார் குண்டு வெடிப்பு: தற்கொலைப் படைத் தாக்குதலா? - அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில், இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர், 24 பேர் காயமடைந்தனர்.

விசாரணை தகவல்கள்:

ஃபரிதாபாத்தில் மருத்துவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து அதிக வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தகவல் கிடைத்தவுடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டாக்டர் முகமது உமர், அவசரமாக இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

மெதுவாக நகர்ந்து சென்றுகொண்டிருந்த 'ஹூண்டாய் ஐ-20' ரக கார் போக்குவரத்து நெரிசலின்போது வெடித்துச் சிதறியது. இதில் அதிக சக்திவாய்ந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பின்னணி மற்றும் கைது:

ஸ்ரீநகரில் ஒட்டப்பட்ட எச்சரிக்கை போஸ்டர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான், பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத சதிச் செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஃபரிதாபாத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

உமரின் சகோதரர்கள், தாயார் மற்றும் அவர் பணியாற்றிய மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் காவல்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் உச்சக்கட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு புலனாய்வு அமைப்புகளும் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking information Delhi car blast incident


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->