வாட்டிவதைக்கும் வெயில்.. பள்ளிகளின் நேரம் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஒடிசாவில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப் படுவதாக ஒடிசா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என ஒடிசா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scorching sun school timing change in odisha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->