கர்நாடகா : பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் - 4 பேருக்கு வலைவீச்சு - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் உப்பள்ளியில் உள்ள பள்ளியில் படித்து வருபவர் 15 வயதுடைய சிறுமி. இந்நிலையில் இவருக்கும், உப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி தந்தையின் செல்போன் மூலம் வாலிபருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் வாலிபர், நேற்று முன்தினம் மாணவியிடம் செல்போன் வாங்கி தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் உப்பள்ளி ரிங்ரோடு பகுதியில் உள்ள பாலத்துக்கு அடியே மாணவியை அழைத்துச் சென்று, அவரது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் மாணவி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girl gang rape in Karnataka


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->