கடன் தொல்லை.! சலூன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் கடன் தொல்லையால் சலூன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கக்கலிபுரா பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (33) பெங்களூருவில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவருக்கு போதிய வருமானம் இல்லாததால் பலரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து சிவராஜிக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இதையடுத்து சிவராஜ் வட்டி கட்டாததால் அவரது மோட்டார் சைக்கிளையும் தூக்கிச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சிவராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிவகுமார், வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு தொந்தரவு கொடுத்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிவராஜின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கக்கலிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

salon shopkeeper commits suicide by drinking poison in Karnataka


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->