கடன் வாங்கியவர்களை மிரட்டி, அச்சுறுத்த கூடாது; ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்​தி​யா​வில் வங்​கி​கள் மற்​றும் நிதி நிறு​வனங்​களிடம் கடன் பெற்று தவணையை செலுத்தத் தவறும் வாடிக்​கை​யாளர்​களை, வசூல் முகவர்​கள் அச்​சுறுத்​து​வதைத் தடுக்​கும் வகையில் இந்​திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த புதிய அதிரடி உத்​தர​வைப் பிறப்பித்துள்ளது.

கடன் வாங்​கிய​வர்​களை மிரட்​டு​தல், திட்​டு​தல், சமூக வலை​தளங்​களில் தொல்லை தருதல் போன்ற செயல்​களில் வங்கி ஏஜெண்டுகள் ஈடு​படக்​ கூ​டாது என்று புதிய விதி​களை வெளி​யிட்​டுள்​ளது. இது கடன் வாங்​கிய​வர்​களுக்கு பெரிய அளவில் நிம்​ம​தியை கொடுக்கும் வகையில் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதாவது கடன் வாங்கியவர்களிடம் கடன் நிலு​வையை வசூலிப்​பது வங்​கி​யின் உரிமை​யாக இருந்தாலும், அது வாடிக்​கை​யாளரின் தனிப்​பட்ட சுதந்​திரம், கண்ணி​யம் மற்​றும் தனி​யுரிமை​யைப் பாதிக்​கும் வகை​யில் அமையக் ​கூ​டாது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

வங்​கி​கள் மற்​றும் வசூல் முகவர்​களுக்​கான இந்த ஒருங்​கிணைந்த புதிய வழி​காட்​டு​தல் விதி​முறை​கள் 2027 ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழு​வதும் அதி​காரப்​பூர்​வ​மாக அமலுக்கு வரவுள்​ளன. இந்த புதிய விதி​களின்​படி, வங்கி வசூல் முகவர்​கள் காலை 08 மணி முதல் மாலை 07 மணி வரை மட்​டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்​ளவோ அல்​லது நேரில் சென்று சந்​திக்கவோ முடியும்.

மேலும், தெரி​யாத அல்​லது புதிய செல்​போன் எண்​களில் இருந்து அழைப்​பது, அச்​சுறுத்​தும் வார்த்​தைகளைப் பயன்​படுத்​து​வது, வாடிக்​கை​யாளர்​களை திட்​டு​வது, மிரட்​டு​வது, சமூக வலைதளங்களில் வாடிக்​கை​யாளரின் விவரங்​களைப் பதி​விட்டு தொல்லை தரு​வது மற்​றும் உறவினர்​கள், நண்​பர்​களைத் தொடர்பு​கொண்டு தொந்​தரவு செய்​வது முற்​றி​லு​மாகத் தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

அத்துடன், வசூல் முகவர்​கள் தங்களது அடை​யாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Reserve Bank issues new notice to borrowers not to be intimidated


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->