மணிப்பூரில் ஆறு வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 

அதாவது, வெளிமணிப்பூரில் நான்கு வாக்குச்சாவடிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும், இரண்டு வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம் என்ற அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

இதையடுத்து வாக்குப்பதிவு தடைபட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, 6 வாக்குச்சாவடிகளில் இன்று கூடுதல் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

re election six voting poll in manipur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->