உங்கள் வாக்கு... எதிர்கால தலைமுறையை தீமானிக்கும் - ராகுல்காந்தி.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உங்களது வாக்குகள் எதிர்கால தலைமுறையை நிர்ணயிக்கப் போகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு. உங்கள் வாக்குகள் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும் வருகின்ற தலைமுறையையும் தீர்மானிக்க போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

கடந்த 10 ஆண்டுகளில் தேசத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களுக்கு உங்கள் வாக்கு என்ற தைலத்தை பூசி ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். 

வெறுப்பை தோற்கடித்து ஒவ்வொரு மூலையிலும் அன்பின் கடையை திறக்கவும் என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi your votes going decide future generation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->