''நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய மாணவர்​கள் மீதான காவல் துறை நடவடிக்​கைக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க வேண்டும்''; ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி சிஜேபி இயக்கத்தினர் நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராட்டம் நடத்தினர். இதில், மாணவர்களுடன் மாணவர்களாக சமூக விரோதிகளும் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது பாராளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். அப்போது பொலிஸாரின் அனுமதியை மீறி தடுப்பு சுவர்களை தாண்டி சிஜேபியினர் சென்றதால் போலீசார் -போராட்டக்காரர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதன் போது போலீசார் மீது மாணவர்கள் போர்வையில் இருந்த சமூக விரோதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலாக கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி தாக்குதல், மற்றும் கண்ணீர்ப்புகை வீசினர். இதன்போது இருதரப்பிலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய மாணவர்​கள் மீதான காவல் துறை நடவடிக்​கைக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க வேண்​டுமென மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். பிரபல ஆங்​கில நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் இது குறித்து கூறி​யுள்ளதாவது;

''டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​தி​ய​போது மாணவர்​கள் மீது காவல் துறை ‘முட்​கள் பதிக்​கப்​பட்ட லத்தி​கள்’ மற்​றும் துகள் துப்​பாக்​கி​களை (பெல்​லட் கன்​ஸ்) பயன்படுத்​தி​யது.

இதில் பல மாணவர் போராளி​களுக்கு எலும்பு முறி​வு, வெட்​டுக்​கா​யம் மற்​றும் சிராய்ப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. பிஹாரின் சியான் நகரில், ஏ.கே-47 உள்​ளிட்ட துப்​பாக்​கி​களால் சுடப்​பட்​ட​தில் பல போராளி​கள் காயமடைந்​தனர்​.

உயர்​மட்ட அதி​காரி​களின் அனு​ம​தி​யின்றி இது​போன்ற நடவடிக்​கையை காவல் துறை எடுத்​திருக்​காது. போராட்​டக் களத்​தில் குவிக்​கப்​பட்​டிருந்த டெல்லி காவல் துறை​யும், விரைவு அதிரடிப் படை​யும் (ஆர்​ஏஎப்) உள்​துறை அமைச்​சகத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் வருபவை்.

இதற்கு இரண்டு சாத்​தி​யக்​கூறுகள் மட்​டுமே உள்​ளன. முதலா​வ​தாக, மாணவர்​கள் மீதான தாக்​குதலுக்கு மத்​திய உள் துறை அமைச்​சர் அனு​மதி அளித்​திருப்​பார் - அப்​படி​யா​னால் அவர் குற்​ற​வாளி. இரண்​டாவ​தாக, இது நடந்​தது அவருக்​குத் தெரிய​வில்லை - அதாவது அவர் முற்​றி​லும் திறமையற்​றவர். எவ்​வாறா​யினும், உள்​துறை அமைச்​ச​ராக, அன்​றைய தினம் நடந்த நிகழ்​வு​களுக்கு பொறுப்​பேற்று அவர் பதவி விலகி இருக்க வேண்​டும்.

எதிர்க்​கட்​சிகள் இளைஞர்​களுக்கு உறு​துணை​யாக நிற்​கும். இளைஞர்​களுக்கு எதி​ராக இது​போன்ற வன்​முறை​யில் ஈடுபட்டவர்​களுக்​கு தண்​டனை பெற்​றுத்​ தருவோம்​.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi says the central government should be held responsible for the police action against students


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->