புல்வாமா தாக்குதலால் பயன் அடைந்தது யார்? எழுப்பப்பட்ட மூன்று கேள்விகள்.! விழிபிதுங்கும் மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படை வீர்ரகள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புக்கு தலைவராக மசூத் அசார் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து 40 பேரின் வீரமரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் திடீரென இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் மூலம் பல பயங்கரவாதிகள் இறந்ததாக  கூறப்பட்டது.

இன்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பாதுகாப்பு படை வீரர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு நிறைவடைவதை ஒட்டி ராகுல்காந்தி மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை கேட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலில் பயன் அடைந்தது யார்? இந்த தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் என்ன? பாதுகாப்பு குறைபாடுகள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாஜக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை என மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul gandhi says pulwama attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->