'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி'.. ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி.! - Seithipunal
Seithipunal


குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் காரணமாக அவரின் மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை இழந்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி அனுமதி மறுத்த டெல்லி போலீசார், டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து, பொதுமக்கள் கூடுவதற்கு தடையும் விதித்தது.

இதற்கிடையே, என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று, காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் தடையை மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தின் பையோவை எடிட் செய்துள்ளார். சுய விவர குறிப்பில் 'தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி' என மாற்றியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi edited in twitter Disqualified MP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->