பஹல்காமில் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும்; பிரதமருக்கு ராகுல் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு இந்திய உள்பட உலக நாடுகளும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தான் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்திலும், தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என கோருவதற்கும் நான் ஆதரவாக உள்ளேன் என்றும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை மூலம் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi demands martyr status for those killed in Pahalgam attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->