நாளை மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி: 1010 கோடி ரூபாய் செலவில் கியாஸ் திட்டத்திற்கு அடிக்கல்..! - Seithipunal
Seithipunal


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி நாளை மேற்கு வங்க மாநிலத்திற்கு விஜயம்  செய்யவுள்ளார்.  அங்கு அவர் 1010 கோடி ரூபாயிலான கியாஸ் வினியோகம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதோடு, அலிபூர்துவாரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் ஒரு வருடத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மோடி அங்கு 1010 கோடி ரூபாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த கியாஸ் வினியோக திட்டத்தின் மூலம் 2.5 லட்சம்திற்கு அதிகமாக வீடுகள்,100-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் எரிவாயு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் உள்ள அலிபூர்துவார் மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் நடைபெறும் இரண்டு அரசு நிகழ்ச்சிகளுக்கு பின் வடக்கு பெங்கால் மாவட்டங்களை ஒட்டிய பகுதியில் பேரணி நடைபெறும் என மாநில பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாளை சிக்கில் மாநிலம் செல்லும் பிரதமர்  அங்கிருந்து மதியம் ஒரு மணியளவில் அலிபூர்துவார் செல்ல இருப்பதாக மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi to visit West Bengal tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->