குடியரசு தலைவரின் காவல்துறை விருது.. தமிழகத்தில் 24 பேருக்கு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் குடியரசு தலைவரால் முழுவதும் சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை குடியரசு தலைவர் வழங்குவார். இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறந்த காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 3 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கப்பட உள்ளது.

அதன்படி வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி ஐ.பி.எஸ் அவர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன் ராமு அவர்களுக்கும், அரியலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரவிசேகரன் அவர்களுக்கும் குடியரசு தலைவரின் சிறந்த காவல்துறை அதிகாரிகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டை சேர்ந்த 21 காவலர்களுக்கு சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் குடியரசுத் தலைவரின் காவல்துறை விருது பெறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Police award announced 24 police officers in TN


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->