சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை வழங்கி கவுரவித்த ஜனாதிபதி முர்மு..! - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி மாளிகையில், தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், ஜனாதிபதி திரவுபதி முர்மு 45 பேருக்கு விருதுகளை வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மத்திய அரசு ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இணையதளம் மூலமாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து இந்த ஆண்டுக்கான விருதுக்காக, 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இன்று தேசிய நல்லாசிரியர்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி, பாராட்டினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Murmu honored best teachers with National Award


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->