வரலாற்று சாதனை படைக்கும் ஜனாதிபதி முர்மு - சபரிமலையில் கட்டுப்பாடுகள் தீவிரம்.!!
president murmu come in sabarimalai may 18 and 19
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்ல உள்ளார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சபரிமலையில் குடியரசு தலைவர் வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சபரிமலையில் மே 18, 19 உள்ளிட்ட தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் வருவது இதுவே முதன் முறை ஆகும்.
English Summary
president murmu come in sabarimalai may 18 and 19