உள்ளூர் ரௌடியை போட்டுத்தள்ள பிரான்சில் இருந்து பணம்.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பங்கள்.! - Seithipunal
Seithipunal


வாணரப்பேட்டை ரௌடி பாம் ரவி கொலை வழக்கு விசாரணையில், அவனை கொலை செய்ய பிரான்சில் இருந்து பண உதவி வந்தது அதிர்ச்சிதரும் வகையில் அம்பலமாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியை சார்ந்தவர் பாம் ரவி (வயது 33). உள்ளூரில் ரௌடியாக வலம்வந்த பாம் ரவியின் மீது 6 கொலை, 7 வெடிகுண்டு வீச்சு உட்பட 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்துள்ளான். 

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி மதியம் வாணரப்பேட்டை முருகசாமி நகரில் உள்ள காண்ட்ராக்டர் அந்தோணி (வயது 28) என்பவரின் வீட்டிற்கு செல்ல ரவி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற நிலையில், அவனை பின்தொடர்ந்து வந்த மற்றொரு தரப்பு வழியில் இடைமறித்து வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், முதலியார்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி பகுதியில் உள்ள சூதாட்ட விடுதியில் கத்தி முனையில் ரூ.4 இலட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி வினோத், தீன் ஆகியோரின் தூண்டுதலில் சம்பவம் நடந்தது அம்பலமானது. 

மேலும், ரவியை கொலை செய்ய ரமணி, பிரகாஷ் (வயது 35), சந்துரு (வயது 20), நவீன் (வயது 21), சதீஷ் (வயது 20), அரவிந்த் (வயது 21) ஆகியோர் பணம் மற்றும் வாகனம் கொடுத்து உதவியதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்த நிலையில், ரமணி சிறையில் உள்ள ரவுடி வினோத்தின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த வருடத்தில் திப்புராயப்பேட்டை பகுதியை சார்ந்த திப்லான் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் ரௌடியாக உலா வந்த திப்லான் திருமணத்திற்கு பின்னர் மனைவி மற்றும் குழந்தையுடன் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கடத்தி கொலை செய்தனர். 

ரவுடி திப்லான் கொலைக்கு பின்ணனியில் ரவியின் தொடர்பு இருப்பதாக நினைத்த திப்லானின் ஆதரவாளர்கள், பழிக்குப்பழி வாங்க சபதம் ஏற்றுக்கொண்டனர். பாம் ரவியை கொலை செய்ய ரூ.4 இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாம் ரவியும் அரசியலில் களமிறங்க நினைத்து ரௌடியிஸத்தில் இருந்து ஒதுங்கி மக்கள் பணி செய்ய தொடங்கிய நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளான வானரப்பேட்டை அருண், பிரவீன் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாம் ரவி கொலை வழக்கில் வேலராம்பேட்டை மோகன் (வயது 21), எம்.ஜி.ஆர் நகர் மாணிக்கம் (வயது 22), சூர்யா (வயது 25) ஆகியோருக்கும் வழக்கில் தொடர்புடையது உறுதியானது. 

இதனையடுத்து, மோகன், மாணிக்கம் மற்றும் சூர்யாவை காவல் துறையினர் கைது செய்த நிலையில், விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து பாம் ரவியை கொலை செய்ய பணம் அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pondicherry Rowdy Bomb Ravi Murder Case From France Murder Money Get


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->