கற்று மாசுபாடு நோய்களை ஏற்படுத்துவதாக கூறி இழப்பீடு கேட்டு மனுதாக்கல்..!
pollution causes diseases Petition compensation claiming
டெல்லி ஐகோர்ட்டில், மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு, ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மனுதாரர் தரப்பில் தெரிவிக்கையில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்தும். மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை ஐந்து முதல் ஒன்பது ஆண்டுகள் வரை குறைக்கும் ஒரு மெதுவான விஷமாகும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை, ஒரு கல்லூரி மாணவர் தாக்கல் செய்ததில் இதை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறிய தீர்ப்பில், கோர்ட்டு என்பது ஒரு முக்கியமான இடம். கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதும் அல்லது மனுத்தாக்கல் செய்வதற்கான உரிமை என்பதும் உங்கள் சுயவிவர விண்ணப்பத்துக்கானது அல்ல. அடுத்த முறை நீங்கள் கோர்ட்டிற்கு ஒரு முக்கியமான பிரச்சினையை கொண்டுவர மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.
கோர்ட்டில், மாசுபாடு பற்றிய பொதுவான விவாதத்தை நான் விவாதிக்க விரும்பவில்லை. மாசு காரணமாக உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஏதேனும் மருத்துவ அறிக்கை?, மருத்துவ சான்றுகள், உங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பரிசோதனை முடிவுகள், உங்கள் தனிப்பட்ட பாதிப்பிற்கு ஆதாரமாக கோர்ட்டில் காட்ட வேண்டும்.
இதுகுறித்து, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கையில், தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக கூறினார். மாசுபாடு காரணமாக தனிப்பட்ட பாதிப்பு, 70 -75 வயதான காலத்தில் மட்டுமே தெரியவரும். ஆனால், மாசுபாடு பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் என்று தெரிவித்தார்.
மேலும், சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, "மாசு இல்லாத சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமையை" அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். இந்த மனுவை அளித்த மனுதாரர் சிவம் பாண்டேவுக்கு தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லை, மருத்துவ ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை தள்ளுபடி செய்தார்.
English Summary
pollution causes diseases Petition compensation claiming