மணிப்பூரில் 6 ராக்கெட்டுகள் மற்றும் நாட்டு பீரங்கி பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர்..! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில், 6 ராக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் இந்த ராக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மெய்டி மற்றும் கூகி பழங்குடியினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில், 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து, இந்த மாநிலத்தில் அடிக்கடி ஆயுதக்குவியல் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சுராசந்த்பூரில் உள்ள ஹெங்க்லாப் பகுதியைச் சேர்ந்த லோய்லாம்காட் மற்றும் நலோன் கிராமப் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்  நடத்திய அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது ,06 ராக்கெட்கள் மற்றும் அதை ஏவும் லாஞ்சர், நாட்டு பீரங்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த இருவர் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மோரோக் இங்கோல் கிராமத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இம்பால் நகரில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், வணிகர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police seize 6 rockets and country made artillery in Manipur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->