ஹெல்மேட் போடல அபராதம் கட்டு.. கார் உரிமையாருக்கு வந்த சம்மன்..! - Seithipunal
Seithipunal


ஹெல்மெட் போடவில்லை என கார் உரிமையாளருக்கு சம்மன் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் அஜித் இவருக்கு கேரள போக்குவரத்து காவல் துறையிடமிருந்து ஒன்று வந்துள்ளது மாருதி ஆல்டோ கார் உரிமையாளரான இவர் ஹெல்மெட் அணிய வில்லை என்பதற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அதற்கான தேதியும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த செலவுடன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அஜித் தெரிவிக்கையில், மோட்டார் வாகனங்களுக்கான துறையில் இதுபற்றி புகார் அளிக்க போவதாக கூறினார். செலானில் வாகனத்தின் பதிவு எண்ணை பதிவு செய்யும்போது ஏற்பட்ட தவறால் இது நிகழ்ந்திருக்க கூடும்  என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Clam fine for Car Owner in Kerla


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->