எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினம் - பிரதமர் வாழ்த்து - Seithipunal
Seithipunal


நாட்டின் எல்லை பாதுகாப்புப் படை கடந்த 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி இந்திய அரசால் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும். 

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி "எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக்" கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இதனைமுன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி நாள் வாழ்த்துக்கள். 

மேலும் இந்தியாவைப் பாதுகாப்பதிலும், நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்வதிலும் சிறந்த சாதனை படைத்த படை இது என்றும், இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலைகளின் போது எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் உன்னதமான பணியை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi wishes to BSF raising Day


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->