மைசூர் : சாலை விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மைசூர் : சாலை விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து சாம்ராஜ்நகர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து கொள்ளேகாலலிருந்து வந்து கொண்டிருந்த கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காருக்குள் இருந்த குழந்தைகள் பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதனால் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆனது. இதையடுத்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காரில் இருந்த மரணம் அடைந்தவர்கள் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 

இந்த நிலையில், மைசூரில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi finance announce for mysore accident death peoples family


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->