ரக்சா பந்தன் கொண்டாட்டம் - பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


ரக்சா பந்தன் கொண்டாட்டம் - பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி மாணவர்கள்.!

ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ரக்சா பந்தன். இந்த நாளில் பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் மணிக்கட்டில் அன்பின் அடையாளமாக ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெறுவது வழக்கம். 

அதன் பின்னர் சகோதரர்கள், அந்த அன்புச் சகோதரிக்கு பரிசு அளிப்பார்கள். வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த பண்டிகை சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்களது சகோதரர்களுக்கு ராக்கிக் கட்டி அன்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் படி, பிரதமர் மோடியும் தலைநகர் டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினார். அங்கு அவருக்கு பள்ளி குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். இதற்கு முன்னதாக பிரதமர் மோடி ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi clebrate raksha bandan with school students in delhi


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->