தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்..ஏர் இந்தியா விமானத்துக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்! - Seithipunal
Seithipunal


ஏர் இந்தியா விமானத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட மிரட்டல் செய்தி டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எக்ஸ் வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை 5:08 மணிக்கு வந்த இந்த மிரட்டல் செய்தி, டெல்லி-இந்தூர்-மும்பை இடையே பயணித்த ஏஐ 636 விமானத்தை குறித்தது. இந்தூர் விமான நிலையத்தில் செய்தியானது உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, விமானத்தில் துரித சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில், மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

இந்த மிரட்டல் செய்தியை அனுப்பிய நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எதிராக பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 351(4) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களில் 510-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. விசாரணையில் அவற்றின் அனைத்தும் உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

இந்த மிரட்டல்கள் எக்ஸ் மற்றும் மெட்டா போன்ற சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், அவற்றை தடுக்க இவை தொடர்பான தகவல்களை உடனடியாக நீக்க உத்தரவை ஐடி அமைச்சகம் வலைதள நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pipe bomb threat to Air India flight from Delhi to Mumbai via Indore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->