பெட்ரோல் தட்டுப்பாடு...? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த எரிபொருள் நிறுவனங்கள்...!
Petrol shortage Fuel companies put an end rumors
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்தியன் ஆயில் (IOCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன.

இந்தியா எரிபொருள் தேவையில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்குவதோடு, கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக பாரத் பெட்ரோலியம் விளக்கம் அளித்துள்ளது.
விநியோகச் சங்கிலியில் எந்தத் தடையும் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி, இயல்பான விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் இருப்பு தாராளமாக உள்ளதால், மக்கள் பீதியடைந்து எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொண்டுள்ள எரிபொருள் நிறுவனங்கள், விநியோகப் பணிகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர்ந்து நடைபெறும் என உறுதியளித்துள்ளன.
English Summary
Petrol shortage Fuel companies put an end rumors