பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுடன் முக்கியமான தகவல்களை பகிர்ந்த நபர்: வாரணாசியில் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது..!
Person shared sensitive information with a pro Pakistan stance Arrested by Anti-Terrorism Squad in Varanasi
கடந்த மாதம் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி விசாரணை நடத்தியதில் இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். விசாரணையின் படி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களின் கைது எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வாரணாசியைச் சேர்ந்த துஃபைல் என்ற நபரை உத்தரப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை கைது செய்துள்ளது. இவர் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-லப்பைக்கின் தலைவர் மௌலானா ஷா ரிஸ்வியின் வீடியோக்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து கொண்டதாகக் சொல்லப்படுகிறது. அத்துடன், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதற்கும் பழிவாங்க அழைப்பு விடுக்கும் செய்திகளையும் அவர் அனுப்பியதாக உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
English Summary
Person shared sensitive information with a pro Pakistan stance Arrested by Anti-Terrorism Squad in Varanasi