விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய இசைக்குழுவினர் வாகனம்: 2 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


கேரளாவில் செயல்பட்டு வரும் இசைக் குழுவில் நீலகிரியைச் சேர்ந்த அஜித், அகில் உள்பட பல இடம்பெற்றிருந்தனர். இந்த இசை குழுவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். 

அது போல் நேற்று சீத்தாத்தோடு பகுதியில் இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர். இசை நிகழ்ச்சி அதிகாலை வரை நடத்திவிட்டு தங்களது வேனியில் இசை குழுவினர் புறப்பட்டு சென்றனர். 

இன்று காலை 6:45 மணியளவில் பத்தனம் திட்டா-கோழஞ்சேரி சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது காய்கறி ஏற்றுக் கொண்டு எதிரே வந்த டெம்போ எதிர்பாராத விதமாக இசைக்கு குழுவினர் வந்த வேன்மீது மோதியது. 

இந்த விபத்தில் இசைக்குழுவைச் சேர்ந்த அஜித், அகில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pathanamthitta near accident 2 death police inquiry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->