பயங்கரவாதிகளை தாக்குங்க... எங்களை ஏன் தாக்குறீங்க... கொந்தளிக்கும் காங்கிரஸ்!
Pahalgam attack Congress BJP
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலை ஏற்படுத்தியது.
இதையடுத்து காங்கிரசின் அதிகாரப்பூர்வ கணக்கில் பிரதமர் மோடியின் தலையற்ற கேலிச் சித்திரம் "கயாப்" (காணவில்லை) எனும் தலைப்புடன் பகிரப்பட்டது. இது சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த போஸ்ட்டுக்கு பாஜகவின் பல்வேறு தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். வெளியான விமர்சனங்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் தனது பதிவை நீக்கியது.
இந்த சூழலில், பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், “தாக்குதலில் யாரை குறிவைக்க வேண்டும் என்பதைப் பற்றியே பாஜக குழப்பத்தில் உள்ளது. பயங்கரவாதிகளையும் பாகிஸ்தானையும் விட்டுவிட்டு காங்கிரசை குறிவைக்கும் பாஜக, நேரம் தவறிய, பொருள் இல்லாத, பொறுப்பற்ற Rajனையை பின்பற்றுகிறது” என்றார்.
அத்துடன், தாக்குதலுக்கெதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
English Summary
Pahalgam attack Congress BJP