இந்தி கற்பிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு! மராத்தி மக்களின் மார்பில் குத்திய பட்னாவிஸ்...
Opposition to the order to teach Hindi Fadnavis stabbed Marathi people in the chest
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாநில அரசு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் மராத்தி வழிப் பள்ளிகளில் இந்தியை 3 -ம் மொழியாகக் கற்பிக்க உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்தி கட்டாயமாக இருக்காது என்றும் பொதுவாக 3 -வது மொழியாக இருக்கும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், "ஒரு பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் கற்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மொழிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார் அல்லது அந்த மொழி ஆன்லைனில் கற்பிக்கப்படும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதுமட்டுமின்றி,இந்த நடவடிக்கையின் மூலம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மராத்தி மக்களின் மார்பில் குத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிரா அரசு 1 -ம் வகுப்பிலிருந்து இந்தியை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 அன்று, மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தாதா பூசே, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய உத்தரவு வந்துள்ளது.
English Summary
Opposition to the order to teach Hindi Fadnavis stabbed Marathi people in the chest