மூணாறில் ஏற்பட்ட நிலச்சரவில் ஒருவர் மாயம்! செல்போன் எடுக்கச் சென்றதால் ஏற்பட்ட விபரீதம்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மலையோர பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. மூணாரின் சுற்றுவட்டார பகுதியான குண்டலை, எல்லபட்டி, டாப்ஸ்டேஷன் பகுதிகளில் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்தது. இதில் புதுக்கடை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் காற்று வெள்ளம் உருவாகி கற்கள் சாலைகளில் சரிந்தன.

டாப் ஸ்டேஷன் சென்று விட்டு மூணாரை நோக்கி திரும்பிய கோழிக்கோடு சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி தப்பித்த நிலையில் ரூபேஷ் என்பவர் தன் செல்போனை எடுக்க வேனில் ஏறி உள்ளார்.

அப்பொழுது காற்று வெள்ளம் அதிகரித்ததால் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. அந்த சமயம் வேன் ஓட்டுனர் தப்பித்த நிலையில் ரூபேஷ் மட்டும் மாயமாகியுள்ளார். ரூபேஷை தேடும் பணியில் மூணார் தீயணைப்பு துறையினருக்கு போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One person was missing in the landslide in Munnar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->