செல்போனில் வந்த செய்தி.! அதிர்ச்சியில் மூதாட்டிக்கு ஏற்பட்ட கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கொரோமா பாசிட்டிவ் என்று மொபைல் போனுக்கு மெசேஜ் வந்த காரணத்தால், மூதாட்டி ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அருகே பியரி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் தனது மகன் மற்றும் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு லேசான காய்ச்சல் இருந்து உள்ளது. எனவே அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்கின்றார். 

அதன் பின்னர், வீட்டிற்கு திரும்பி இருந்த நிலையில் சம்பவ தினத்தில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் மூதாட்டிக்கு கொரோனா இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக அவரை மீட்டு மகன் மற்றும் கணவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக கூறி இருக்கின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old women shocked and died about corona positive message


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->