நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது...! பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசுவாரா? - Seithipunal
Seithipunal


இன்று டெல்லியில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது.இது  பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

மேலும், மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட இந்த நிதி ஆயோக் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார்.

இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாசல பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NITI Aayog meeting has begun Will Chief Minister MK Stalin speak to Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->