அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்..! போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


நொய்டா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லி காசியாபாத் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் தாயும், சேயும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிகாலை 4.30 மணியளவில் பெண் ஒருவர் குழந்தையை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newborn baby abducted from govt hospital in Noida


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->