நீட் மறுதேர்வு நடத்த முடியாது! சென்னை ஐகோர்டுடன் வாதம் செய்யும் மத்திய அரசு
NEET re examination cannot be conducted Central government argues with Chennai High Court
கடந்த 4 ம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில்,மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 நடத்தப்பட்டது. இவை சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. மேலும், பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியிலிருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது.

இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில், தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குக்கான மனுவில்,'மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை" மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு, 'மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது' எனத் தெரிவித்தது. இதையடுத்து, வருகிற 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
English Summary
NEET re examination cannot be conducted Central government argues with Chennai High Court