ராஜஸ்தான் : ஓடும் ரெயிலில் ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பயணசீட்டு பரிசோதகர் இடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் கடந்த 13-ந்தேதி ரெயில் மூலம் அஜ்மீருக்கு சென்றுள்ளார். 

அப்போது, அந்த ரெயிலில் பயணசீட்டு பரிசோதகராக விஷால் சிங் என்பவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். இதையடுத்து பொதுப்பெட்டியில் பயணம் செய்த அந்த பெண்ணுக்கு ஏ.சி. பெட்டியில் இருக்கை ஒதுக்கி தருவதாக கூறி அவரை தனியாக அழைத்து சென்றுள்ளார். 

அந்த பெண்ணும் அதை உண்மை என்று நம்பி சென்றுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பயணசீட்டு பரிசோதகர் அந்த பெண்ணுக்கு ரெயிலில் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான பயணசீட்டு பரிசோதகரை ரெயில்வே போலீசார் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near rajasthan Tamil Ticket Examinersuspend for foreign woman sexual harassment case


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->