மும்பை : தடுப்புச்சுவரில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் குர்லா மேற்கு சகாகர் சால் பகுதியை சேர்ந்தவர் ஹிமேஷ். இவர் குர்லா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் சலூனுக்கு முடிவெட்ட சென்றார். அதன் பிறகு அவர் நண்பர்களான லக்சயா ஜெய்ஸ்வால் மற்றும் அனிஷ்குப்தா உள்ளிட்டோருடன் ஸ்கூட்டரில் சென்றார்.இதில், ஸ்கூட்டரை ஹிமேஷ் ஓட்டிச்சென்றுள்ளார். 

இவர்கள் சாந்தாகுருஸ்-செம்பூர் லிங் சாலையில், சென்ற போது முன்னால் சென்ற கார் திடீரென பாதை மாறியதனால் திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதனால், மூன்று பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்கள் மூன்று போரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹிமேஷ் மற்றும் லக்சயா ஜெய்ஸ்வால் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

மேலும், அனிஷ்குப்தாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai two school students died for bike accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->