மகாராஷ்டிரா || தகாணுவில் லேசான நிலநடுக்கம்.!
near maharastra medium earthquake in thakanu
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தகானு, பால்கர், தானுடல்வாடி உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தகானு தாலுகாவில் உள்ள தானுடல்வாடியில் அதிகளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.04 மணியளவில் தகானுவில் கிழக்கில் இருந்து 24 கி.மீ. தொலைவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது பற்றி தகவலறிந்த அதிகாரிகள் அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 5 கி.மீ ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
near maharastra medium earthquake in thakanu