கேரளா || ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.! நான்கு பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சாலையில், செல்லும் காருக்குள் பத்தொன்பது வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்த வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோட்டை பகுதியைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் செய்துவருகிறார். அதற்காக இவர் காக்கநாட்டு பகுதியில் தங்கியுள்ளார். 

இந்நிலையில், இவரை அவருடைய தோழியான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்ட்டி ஒன்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு இந்த பெண்ணை அறிமுகப்படுத்தியுள்ளார். 

அதன் பின்னர், அந்த பார்ட்டியில் மது அருந்திய அவர்கள், மதுபோதையில் அந்த இளம்பெண்ணை காருக்குள் ஏற்றி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு, அந்த கும்பல் அவரை காக்கநாட்டில் இறக்கிவிட்டுள்ளனர். 

இதனால், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near kerala four peoples arrested for sexually harassment case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->