கர்நாடகா : சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்த பெற்றோர்கள் - ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் காக்கி நாடா பகுதியைச் சேர்ந்தவர் லீலா பவித்ரா நீலாமணி என்ற இளம்பெண். பட்டதாரியான இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் முருகேஷ் பால்யா பகுதியில் உள்ள ஒமேகா கெல்த்கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 

இவரும், டோம்லூரில் உள்ள லாஜிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் லீலா தனது பெற்றோரிடம் தினகரை திருமணம் செய்வது குறித்து தெரிவித்த போது அவர்கள் சாதியை காரணம் காட்டி திருமணத்தை மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்ந தினகர் நேற்று மாலை 7.30 மணியளவில் ஒமேகா ஹெல்த் கேர் அலுவலக வாயிலில் காத்திருந்தார். அப்போது, பணி முடிந்து  வெளியே வந்த லீலாவை தினகர் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த லீலா கீழே சரிந்து விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் தினகர் அங்கிருந்து தப்பித்து விட்டார். அதன் பின்னர் அவர்கள் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு லீலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்த விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார்  சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியான தினகரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga woman died for boy friend kill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->