ஏடிஎம்- க்கு பணம் வைக்க சென்ற வேன்.! காவலாளி மீது துப்பாக்கிச் சூடு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகே ஐசிஐசிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக நேற்று மாலை 5 மணியளவில் வங்கியில் இருந்து வேனில் பணம் கொண்டுவரப்பட்டது. 

அந்த வேனில் பாதுகாப்பிற்காக காவலாளி மற்றும் ஊழியர்களும் வந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஏடிஎம் வேனில் இருந்த காவலாளியை சுட்டார். 

இந்த துப்பாக்கிச் சூட்டில், காவலாளி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அந்த நபர் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக வேனில் வைத்திருந்த ரூ. 8 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். 

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த காவலாளியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காவலாளி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலாளியை சுட்டுக்கொன்று பணத்தை கொள்ளையடித்து சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near delhi atm cash van guard died for gun shoot


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->