அசாம் :  ராகிங் தொல்லையால் மாணவன் தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் திப்ரூகார் மாவட்டத்தில் திப்ரூகார் பல்கலை கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்து இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அங்கு முன்னாள் மாணவர்கள் ராகிங் தொல்லை அளித்ததனால், விடுதியில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதை பார்த்த சக மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மாணவர் ஆனந்த் சர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, ஆனந்தின் பெற்றோர்  5 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். 

அந்த புகாரின் பேரில் போலீசார் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை கைது செய்துள்ள நிலையில், மேலும், மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

இதையடுத்து, தற்கொலைக்கு முயன்ற மாணவரின் நிலை சிகிச்சைக்கு பின்னர் முன்னேறி வருகிறது. மேலும், தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று திப்ரூகார் மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near asam college student sucide attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->