ஓம் மந்திரம்.. அல்லாவா.? முஸ்லிம் மத தலைவரின் சர்ச்சை பேச்சு.! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தில் இருக்கின்ற ஓம் மந்திரம் பற்றி முஸ்லிம் தலைவர் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையாகி உள்ளது.

டெல்லியில் இன்று ஜமீயத் உலாமா ஐ ஹிந்த் அமைப்பின் சார்பில் ஒரு மாநாடு நடந்தது ராம் லீலா மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஜெயின், இந்து, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய மத தலைவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

அப்போது முஸ்லிம் மத தலைவரான மௌலானா ஹர்ஷத் மைதினி எனும் நபர் மேடையில் பேசிய போது, "ஓம் என்ற இந்து மதத்தின் சொல்லும் அல்லாவும் ஒன்றுதான்." என்று கூறினார். ஓம் என்ற வார்த்தைக்கு நிறம் உருவம் எதுவும் இல்லை. காற்றைப் போலவே அது அனைத்து இடங்களிலும் இருக்கிறது.

இதையேதான் எங்கள் மதத்தில் அல்லா என்று அழைக்கிறோம்." என்று கூறினார். இதை கேட்ட மற்ற மத தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனை தொடர்ந்து அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. மத நல்லிணக்கத்திற்காக அமைக்கப்பட்ட இந்த கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியானதாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim Leader About Hindu Ohm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->