குடும்ப வறுமையால் பெற்ற குழந்தையை விற்பணை செய்த தாய் - தீவிர விசாரணையில் போலீசார்.!
mother sale born baby in kerala
குடும்ப வறுமையால் பெற்ற குழந்தையை விற்பணை செய்த தாய் - தீவிர விசாரணையில் போலீசார்.!
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில், அந்த குழந்தையை அதன் தாயே ரூ. 3 லட்சத்துக்கு விற்பணை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை விற்பணை செய்த தாயையும், அதனை வாங்கி சென்ற பெண்ணையும் தேடிவந்தனர். முதலில் குழந்தையை வாங்கிய பெண் குறித்த விபரம் தெரியவந்தது.
அந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு குழந்தையை வாங்க உதவிய நபரையும், அவர் மூலம் குழந்தையின் தாயாரையும் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் குழந்தையை விற்பணை செய்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பெண், குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்பணை செய்ததாக தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
mother sale born baby in kerala