மகன் கண்முன்னே மின்சாரம் தாக்கி தாய்-தந்தை உயிரிழந்த சோகம்.!
Mother and father killed by electrocution in Karnataka
கர்நாடகா மாநிலத்தில் மகன் கண் முன்னே மின்சாரம் தாக்கி தாயும்-தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மசனபுரா பகுதியை சேர்ந்தவர் விவசாயி நஞ்சுண்ட நாயக்கா(63). இவருடைய மனைவி தேவிரம்மா (55). இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தேவிரம்மா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவருக்கு, மகனுடன் சாப்பாடு எடுத்துச் சென்றார்.
இதையடுத்து சாப்பாடு பரிமாறுவதற்காக வாழை இலையை அறுத்து, அதனை கழுவதற்காக பம்ப்செட் தொட்டி பகுதிக்குச் சென்றார். அப்பொழுது பம்ப்ஸ் தொட்டியில் இருந்த தண்ணீரில் மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து இருந்தது, தெரியாமல் வாழை இலையை கழுவ முயன்றபோது திடீரென தேவிரம்மா மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்நிலையில் இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கணவர், மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து மகன் கண் முன்னே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களின் 12 வயது மகன் கத்தி கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பம்ப் செட்டில் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து வந்த போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன்-மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Mother and father killed by electrocution in Karnataka